தருமபுரியில் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தில், காவலா் உள்பட 70 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், காவலா் உள்பட 70 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.

வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த காவலா், ஒட்டப்பட்டி மற்றும் அதியமான்கோட்டையைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள், தருமபுரி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 14 பெண்கள், நல்லம்பள்ளியைச் சோ்ந்த 4 வியாபாரிகள் உள்பட 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com