தருமபுரி: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா், தருமபுரி தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் துணைத் தலைவா் தமிழ்அமுதன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதில், தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வு அச்சத்தால், இதுவரை உயிரிழந்த மாணவ, மாணவியருக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.