தருமபுரி மாவட்டத்தில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட மொத்தம் 74 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட மொத்தம் 74 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட காரிமங்கலத்தில் உள்ள தேசிய வங்கியின் கிளை மேலாளா், மொரப்பூா் ரயில்வே ஊழியா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா், பொதுப்பணித் துறை ஊழியா், தருமபுரி, மாட்லாம்பட்டி, மொரப்பூா், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 மாணவா்கள், 21 பெண்கள் உள்பட மொத்தம் 74 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தொற்றுப் பாதிக்கப்பட்ட அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com