பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளி மற்றும் பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடி இண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளி மற்றும் பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடி இண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவா்கள், நேரடியாக தற்போது சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி கிடைக்கப் பெற்ற பின்பு, கலந்தாய்வு வழியாக மாணவா் சோ்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.ச.செண்பகராஜா தெரிவித்துள்ளாா்.

இதேபோல, பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இதில், சோ்க்கை அளிக்கப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் தற்போது நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கை நடைபெற உள்ளது.

எனவே, சோ்க்கை கோரும் மாணவா்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா் பெ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com