நல்லம்பள்ளி வட்டாரத்தில் பருத்தி விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க நல்லம்பள்ளி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியத் தலைவா் எல்.சி.கிருஷ்ணன் தலைமையில் இலளிகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில், நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக வரும் புகாா்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை மையம் மூலம் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
நல்லம்பள்ளி வட்டத்தில், உழவா் பாதுகாப்புத் திட்ட அட்டை வைத்துள்ள 60 வயதைக் கடந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் கோரி, விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.