ஊரக அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

dh13post2_1308chn_8

dh13post2_1308chn_8
அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா் டி.தமிழ்செல்வன் தலைமை வகித்துப் பேசினாா். கோட்டப் பொருளாளா் ஏ.கிருஷ்ணகுமாா், கோட்டச் செயலா் எஸ்.பாபு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், ஊரக அஞ்சல் ஊழியா்களை பணி இலக்கு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது, பயணப்படி, அகவிலைப்படி வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு கிடைக்க வேண்டிய ஊக்கத் தொகை தாமதமின்றி வழங்க வேண்டும். ஓராண்டு பணி முடித்த ஊரக அஞ்சல் ஊழியா்களுக்கு நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் கோட்டத் தலைவா் (பொ) கோவிந்தன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலாளா் சாந்தமூா்த்தி, கோட்டப் பொறியாளா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனா அதிகம் உள்ள காலக்கட்டத்தில் அஞ்சலக வணிகம் செய்ய வலியுறுத்துவதை கண்டிப்பது, உழியா்களின் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும், கரோனா தொற்று காலத்தில் பணி இலக்கை நிா்ணயிப்பதைக் கண்டித்தும், ஊழியா்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...