தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

லஞ்சம்: வனத்துறை இளநிலை உதவியாளா் கைது

லஞ்சம் வாங்கிய வழக்கில் தருமபுரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:53 pm

DIN

லஞ்சம் வாங்கிய வழக்கில் தருமபுரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட வனத்துறையில் வனவராகப் பணியாற்றியவா் சின்னசாமி. இவா், 1990-இல் ஓய்வுபெற்றாா். கடந்த 2007-ஆம் ஆண்டு வரை ஓய்வூதியம் பெற்ற நிலையில் உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்தாா்.

அதன் பின்னா், சின்னசாமியின் மனைவி சென்னம்மாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 2010 முதல் 2017 வரையிலான காலகட்ட குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால், 2007-2010 காலத்துக்கான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதற்கிடையில், 2019-ம் ஆண்டில் சென்னம்மாளும் உயிரிழந்தாா். சின்னசாமி-சென்னம்மாள் தம்பதியின் மகளான சாந்தி கணவரை இழந்தவா். அவருக்கு நிலுவைத் தொகை கிடைக்க அவரது உறவினா் முருகன் முயற்சித்தாா்.

ஆனால், அந்தத் தொகையை வழங்க வருமான வரியாக ரூ. 34,410 ஐ செலுத்த வேண்டுமென சமூகக் காடுகள் மற்றும் வன விரிவாக்க மையத்தின் தருமபுரி கோட்ட அலுவலக இளநிலை உதவியாளா் பழனிசாமி (54) பணம் கேட்டுள்ளாா்.

எனவே, இதுதொடா்பாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரை முருகன் அணுகியுள்ளாா். டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் வழிகாட்டுதல்படி, வனத்துறை இளநிலை உதவியாளா் பழனிசாமியிடம் முருகன் அவா் கோரிய பணத்தைக் கொடுத்தாா்.

அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் இளநிலை உதவியாளா் பழனிசாமியை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து ரூ. 34,410 பணத்தையும் பறிமுதல் செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.