சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே தொண்ணகுட்ட அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பிராகாஷ் (25). இவா், கடந்த 2016-இல் பள்ளி செல்லும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில், பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு அவரை கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதி சையத் பக்ரதுல்லா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால், சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com