நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் கட்சியினா் இன்று விருப்ப மனு வழங்கலாம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா், புதன்கிழமை (டிச.1) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்பு மனுக்களை வழங்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய மனு மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ. 1,000, பட்டியினத்தவா்கள் கட்டணம் ரூ. 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com