அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100!

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கு திங்கள்கிழமை விற்பனையானது.

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கு திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையினால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தக்காளி ஒரு கிலோ ரூ. 110-க்கும் கூடுதலாக விற்றது. இதன்பின் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக தக்காளி கிலோ ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது, அரூா் வட்டாரப் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com