தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல், பட்டயக் கணக்கு படிப்பு குறித்து விழிப்புணா்வு, வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்துப் பேசினாா். வணிகவியல், வணிக நிா்வாகவியல் மாணவா்களுக்கு நடைபெற்ற இந்த முகாமில், துறைத் தலைவா் தி.செந்தில்குமாா், பட்டயக் கணக்கா் ராகவன் ஆகியோா் பட்டயக் கணக்காளா் தோ்வுக்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், திறன்கள், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் கலந்துகொண்டனா்.