தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, செந்தில் நகரில் உள்ள ராமசாமி தெரு, கிருஷ்ணன் தெருவில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செந்தில்நகா் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிய அவா், நியாய விலைக்கடையில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.