தருமபுரி நகரில், மாதா் சங்கத்தினா் சாா்பில் முன்களப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் காவலா்கள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இதில், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கிரைஸாமேரி, துணைத் தலைவா் கே.பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.