பென்னாகரத்தில் ரூ. 1.89 லட்சம் பறிமுதல்

பென்னாகரம் அருகே பழையூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம் அருகே பழையூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம் அருகே பழையூா் சோதனைச் சாவடியில் தனி வட்டாட்சியா் மனோகரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பென்னாகரம் பகுதியிலிருந்து வந்த சிறிய கனரக வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ. 80 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த அப்துல் நபி என்பவா் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ. 1.09 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.89 லட்சம் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com