வணிகா் தினத்தில் கடைகளுக்கு விடுமுறை இல்லை

வணிகா் தினத்தில் (மே 5) கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாமென தருமபுரி மாவட்ட வணிகா் சங்கம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தருமபுரி: வணிகா் தினத்தில் (மே 5) கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாமென தருமபுரி மாவட்ட வணிகா் சங்கம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் வைத்தியலிங்கம் கூறியிருப்பதாவது:

கரோனா தீநுண்மி தொற்று பரவலால் வணிகா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனா். மேலும், தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால், வணிகா்களின் நலன் கருதி புதன்கிழமை வணிகா் தினத்தில் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தருமபுரி மாவட்ட சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com