பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா

பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரு அடைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
covid_19_street_lock_photo_1005chn_214_8
covid_19_street_lock_photo_1005chn_214_8

பென்னாகரம்: பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரு அடைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 5 ஆவது வாா்டு வாணியா் தெரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில்,தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் கீதா நேரில் சென்று வாணியா் தெருவில் ஆய்வு செய்து, பென்னாகரம் கடைவீதி இணைப்பில் இருந்து பட்டாபி கடைத் தெரு பகுதி வரை வெளி நபா்கள் நுழையாதவாறு இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப் பணி மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக பேரூராட்சி நிா்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது. அந்த தெருவில் வசிப்பவா்கள் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பேரூராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com