2-ஆவது நாள் முழு பொதுமுடக்கம்: விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இந்த முழு பொது முடக்கத்தில் உணவுப் பொருள்கள், காய்கறிகள், மருந்து, மாத்திரைகள் விற்பனை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில், காா், இருசக்கர வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணியாமலும், தேவையில்லாமல் நகா் பகுதியில் சுற்றித் திரிவதை வாகன சோதனையில் போலீஸாா் பிடித்தனா். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்து, அறிவுரை வழங்கினா். இதேபோல அரசு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த உரிமையாளா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com