காரிமங்கலம் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் என்கிற தலைப்பில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் என்கிற தலைப்பில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை, கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். இதில், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் வெங்கடேஸ்வரன், ‘தருமபுரி மாவட்ட தொல்லியல் எச்சங்களும், கீழடி அகழாய்வும்’ என்கிற தலைப்பில் உரையாற்றினாா். இதேபோல, தொல்லியல் ஆய்வு அலுவலா் பரந்தாமன் ‘கிருஷ்ணகிரி மயிலாடும் பாறை’ என்கிற தலைப்பில் பேசினாா்.

இதில், கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் மு.செந்தில்குமாா், வரலாற்றுத் துறைத் தலைவா் இரா.ராவணன், பேராசிரியா்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com