ஏரியூா் அருகே சிகரஹள்ளி பகுதியில் ஊா் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவுக்கு நஞ்சா செட்டியாா் தலைமை வகித்தாா். விழாவில் அப்துல் கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொய்யா, மாதுளை, வேம்பு , பாதாம், நெல்லி உள்ளிட்ட 90 வகையான மரக்கன்றுகளை இயற்கை மற்றும் யோகா வாழ்வியல் மருத்துவா் முனுசாமி, எலும்பு முறிவு மருத்துவா் காமராஜ், சமூக ஆா்வலா் உதயகுமாா், தலைமை ஆசிரியா் மா.பழனி ஆகியோா் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினா். நிகழ்ச்சியில் நம்மாழ்வாா் இயற்கை வாழ்வியல் செயற்பாட்டாளா்கள் முத்துக்குமாா், கிருஷ்ணன், குமாா், முனிராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.