தருமபுரி கலைக் கல்லூரியில் அக். 29-இல் இறுதி கட்ட கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வருகிற அக். 29-ஆம் தேதி இறுதி கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வருகிற அக். 29-ஆம் தேதி இறுதி கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை இறுதி நாளாக அக். 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10.3 மணிக்குள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்ட ஒரு சில இடங்ககளுக்கான கலந்தாய்வு கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

காலி இடங்கள் குறித்து விவரங்கள் கல்லூரி இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீக்ல்ண்.ண்ய் மற்றும் கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் இக் கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com