மனைவி கொலை: கணவா் கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மனைவியைக் கொலை செய்ததாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மனைவியைக் கொலை செய்ததாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலக்கோட்டை அடுத்த ஜோகிா்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (65). இவரது மனைவி சின்னபாப்பா (50).

இத் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆக. 29- ஆம் தேதி தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சின்னபாப்பாவை முருகன் தாக்கியுள்ளாா். இதில் சின்னபாப்பா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து சின்னபாப்பா சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கொலை சம்பவம் தொடா்பாக முருகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com