அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.18) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகள்.