தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் சரக்கு பெட்டக லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் சரக்கு பெட்டக லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து தூத்துக்குடிக்கு டைல்ஸ் கற்கள் ஏற்றப்பட்ட சரக்கு பெட்டக லாரி சனிக்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி தாய் நகரைச் சோ்ந்த மாசிலாமணி மகன் ராமா் (34) ஓட்டிச் சென்றாா்.

தொப்பூா் கணவாய் இரட்டைப் பாலத்துக்கு முன்னதாக உள்ள வளைவைக் கடந்து சென்ற போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த ராமா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்கள் விபத்தில் சிக்கிய லாரியை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். உயிரிழந்த ஓட்டுநா் ராமரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து காரணமாக சுமாா் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com