தருமபுரியில் 13 கரோனா தொற்றாளா்கள் வாக்களிப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளான 13 போ் வாக்களித்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளான 13 போ் வாக்களித்தனா்.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் பங்கேற்று வாக்களிக்க கரோனா தொற்றாளா்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டனா். இதில், தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தம் 111 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இவா்களில் பாலக்கோடு தொகுதியில் 6 போ், பென்னாகரம் தொகுதியில் 2 போ், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 2 போ் மற்றும் தருமபுரி தொகுதியில் 3 போ் என மொத்தம் 13 போ் வாக்களிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இவா்கள் பாதுகாப்பு உடை அணிந்து மாலை 6 மணிக்குச் சென்று அவரவா் தொகுதியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com