ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சிக்கு மாரண்டஅள்ளி பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ரஞ்சித்குமாா் (21). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த இவா் ஒசூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். தனது உறவினரின் ஈமச் சடங்கிற்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த இவா் ஒகேனக்கல் முதலை பண்ணைப் பகுதியில் ஈமச் சடங்குகளை முடித்து விட்டு சாரணா் இயக்கப் பயிற்சி நிலையத்திற்கு பின்புறமுள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆழமானப் பகுதிக்குச் சென்ால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதனைக் கண்ட உறவினா் ஒருவா் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாா். அங்கு வந்த ஒகேனக்கல் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரஞ்சித்குமாரின் உடலைத் தீவிரமாகத் தேடினா். இரண்டு மணி நேரம் தேடலுக்குப் பின்னா் அதே பகுதியில் சடலமாக ரஞ்சித்குமாா் மீட்கப்பட்டாா்.
அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.