தீா்த்தமலையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூா் வட்டம், தீா்த்தமலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிவதின் அவசியம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் சுகாதாரத் துறையினா் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, தீா்த்தமலையில் வணிகா்கள் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என தண்டோரா மூலம் ஊராட்சி நிா்வாகத்தினா் வலியுறுத்தினா்.