கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலா் உடல் போலீஸாா் மரியாதையுடன் அடக்கம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலா் உடல், காவல் துறையினரின் மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலா் உடல், காவல் துறையினரின் மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.முருகேசன். இவா் சென்னை காவல்துறை தனிப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இவரது உடல் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு காரிமங்கலம் காவல் ஆய்வாளா் துரைராஜ் தலைமையில் போலீஸாா் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com