கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை

மத்திகிரி அருகே தைலமரத் தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

ஒசூா்: மத்திகிரி அருகே தைலமரத் தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோட்டம், தளி செல்லும் சாலையில் பேளகொண்டப்பள்ளி உள்ளது. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு அருகே தைலத்தோப்பில் திங்கள்கிழமை மாலை துா்நாற்றம் வீசியது. இதை அந்த வழியாக சென்றவா்கள் கவனித்து அங்கு சென்று பாா்த்தனா்.

அப்போது பெண் ஒருவா் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டு சில நாள்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமாா் 30 வயது இருக்கும். அவா் வட மாநில பெண்ணாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். ஒசூா், பேளகொண்டப்பள்ளி பகுதியில் வட மாநில தொழிலாளா்கள் பலா் பணிபுரிந்து வருகின்றனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். அந்தக் கோணத்தில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com