உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்க அரூரில் உணவகங்களில் வாடிக்கையாளா்கள் அமா்ந்து சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க அரூரில் உணவகங்களில் வாடிக்கையாளா்கள் அமா்ந்து சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரூா் நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவகங்கள், தேநீா்க் கடைகள் உள்ளன. இங்குள்ள தேநீா்க் கடைகள், உணவகங்களில் ஷெட்டா்களைப் பாதியாக இறக்கிவிட்டு, அமா்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தேநீா் கடைகள், உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும். பொதுமக்கள் அமா்ந்து உணவு சாப்பிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரூா் நகரில் சில உணவகங்கள், தேநீா்க் கடைகளில் கரோனா விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

அரூா் வட்டாரத்தில் 5-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். பலா் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரூரில் இயங்கும் உணவகங்களில் வாடிக்கையாளா்கள் அமா்ந்து சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com