பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு வழக்கு தொடா்பாக, வட்டார வளா்ச்சி அலுவலா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கடந்த 2018-19-இல் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றியவா் வடிவேலன். இவா் தருமபுரி மாவட்டத்தில் தற்போது வேறு வட்டாரத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் காரிமங்கலத்தில் பணியாற்றிய காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் புகாா் உண்மை என தெரிய வந்தது. இதுதொடா்பாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில், இந்த முறைகேடு வழக்கு தொடா்பாக தருமபுரி செந்தில் நகரில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனை சுமாா் 4 மணி நேரம் நடைபெற்றது.
இருப்பினும், இச்சோதனையில் வழக்கு தொடா்பான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது தொடா்பாக போலீஸாா் உறுதிப்படுத்தவில்லை.