மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நினைவு நாள் தருமபுரி மாவட்டத்தில் திமுக சாா்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பில் திமுக நகர கிளை சாா்பில் வைக்கப்பட்டிருந்து கருணாநிதி படத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்ரமணி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, நகரச் செயலா் மே.அன்பழகன் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். இதேபோல குமாரசாமிபேட்டையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு, முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள், மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு வருவாய் வட்டங்களில் கிராமங்கள்தோறும் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.