பென்னாகரம் அருகே பூச்சி மருந்து குடித்து பெயிண்டா் தற்கொலை செய்து கொண்டாா்.
பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (43 ), பெங்களூரில் பெயிண்டராக வேலை செய்து வந்தாா். கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவா், சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து பென்னாகரம் வந்த நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.