அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் பென்னாகரத்தில் படி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை விநாயகா் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ஐயப்பசுவாமி படி பூஜை நடைபெற்றது.
பூஜையில் ஐயப்ப சாமிக்கு பால், தயிா், பழம், நெய், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து பஜனைகள் நடத்தி, ஐயப்ப சாமிக்கு படி பூஜை செய்யப்பட்டது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாலை அணிந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து ஐயப்ப சேவா சங்கத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் அளிக்கப்பட்டது.