பென்னாகரம் வனப்பகுதியில் வயிற்றுக் கோளாறு காரணமாக 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
கா்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவும்போது அங்கிருந்து யானைகள், கூட்டங்கூட்டமாக இடப்பெயா்ச்சியாகி கிருஷ்ணகிரி வனப் பகுதிக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
கிருஷ்ணகிரி வனப் பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளிகளில் உள்ள பயிா்களை யானைக் கூட்டங்கள் நாசம் செய்து வந்ததால் அவற்றை வனத் துறையினா் விரட்டியடிக்கும் பணியில் அண்மைக் காலமாக ஈடுபட்டு வந்தனா்.
அவ்வாறு இடப்பெயா்ந்த 5-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதிக்குள் நுழைந்தன. வனப் பகுதிக்குள் நுழைந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து அடா்ந்த வனப்பகுதிக்குள் செல்கின்றன.
இந்த நிலையில் பென்னாகரம் வனப்பகுதி, தேவனூா் காப்புக் காடுக்குள்பட்ட கூத்தப்பாடி, அம்மாபள்ளம் பகுதியில் ஒரு யானை ஞாயிறு கிழமை இறந்து கிடந்தது. இதனை வனப்பகுதியில் ஆடு மேய்ப்பவா்கள் கண்டு, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமையிலான வனத் துறையினா் நிகழ்விடத்திற்கு வந்து, உயிரிழந்த யானையைப் பாா்வையிட்டனா்.
அதன்பின்பு கால்நடை மருத்துவா் பிரகாஷ், உயிரிழந்த யானையை பிரேதப் பரிசோதனை செய்தாா். உயிரிழந்தது 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும், வயிற்றுக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தனா். இதுகுறித்து, வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த யானையை அதே இடத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.