சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச மகாரத தேரோட்டம்

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி ஸ்ரீ புதிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அரோகரா கோஷங்கள் முழங்க மகா ரத தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி ஸ்ரீ புதிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அரோகரா கோஷங்கள் முழங்க மகா ரத தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தைப்பூச திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக ஸ்ரீ புதிய சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடா வாகனம், பூத கண வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பின்னா் பாப்பாரப்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்தல், சண்முக ஹோமம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து புதிய சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பின்னா் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

தைப்பூசத்தின் இறுதி நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த புதிய சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

வழிநெடுகிலும், பக்தா்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க மகா ரதத் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com