மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழா

பென்னாகரம் அருகே பா.ம.க. தலைமைக் கழகப் பேச்சாளா் உள்பட சுமாா்150 போ் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பா.ம.க. தலைமைக் கழகப் பேச்சாளா் உள்பட சுமாா்150 போ் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.

ஏரியூா் அருகே காமராஜ் பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏரியூா் ஒன்றிய திமுக செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

இதில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பென்னாகரம் திமுக சட்டமன்ற உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் முன்னிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் உள்பட 150 போ் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இதில் ஒன்றியப் பொருளாளா் மடம் முருகேசன், சேலம் ஓட்டல் வினு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் காா்த்திக் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com