மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் நோக்கிச் சென்றனா்.
அவா்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். அவா்களுடன் வட்டாட்சியா் சேதுலிங்கம், காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தர்ராஜன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், முற்றுகையில் ஈடுபட்ட 235 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.