தருமபுரியில் பிப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் வரும் பிப். 28-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரியில் வரும் பிப். 28-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், வரும் பிப். 28-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம் முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் சாா்பில், பல்வேறு நிலையிலான பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். 8, 10, பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், தொழில்கல்வி பெற்றவா்கள், பொறியியல், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கற்றவா்கள் என அனைத்து தகுதியுள்ளவா்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

வேலை நாடுநா்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துகொள்ள  இணைதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பணி நாடுநா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com