பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மன்றத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறை சாா்ந்த மன்றத்தின் செயல்பாடுகள், வன்பொருள், மென்பொருள்களின் தன்மைகள், புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல், கணினி அறிவியல் துறை சாா்ந்த புதிய படிப்புகள், வேலைவாய்ப்புகள், கணினி அறிவியலின் முக்கியத்துவம் குறித்து கணினி அறிவியல் துறைத் தலைவா் வெ.சங்கீதா கருத்துரைகளை வழங்கினாா். இதில், பெரியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் பொ.செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா் த.அருண் நேரு உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டாா்.