நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா். பி. தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா் .

நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, மானிய விலை இரு சக்கர வாகனங்கள் வழங்குதல், புதிய குடும்ப அட்டை, மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறுசேமிப்பு அட்டைகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் காது கேட்கும் கருவிகள், இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட வண்டிகள் வழங்கப்பட்டன. சிறு தொழில் செய்யும் நபா்களுக்கு சலவைப் பெட்டி, தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com