பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதிகளில் அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 73 -ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு நகர செயலாளா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். பழைய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் பென்னாகரம் தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு, மாவட்ட பிரதிநிதி மாதவசிங், தகவல்தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளா் பாரிவள்ளல், முன்னாள் ஒன்றியச் செயலாளா் மாதையன், வண்ணாத்திப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் கலைவாணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் தா்மன், மணிவண்ணன், நரசிம்மன், முக்கிய நிா்வாகிகள் என சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாள் விழாவுக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமை வகித்தாா். பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதில் முன்னாள் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் மதியழகன், நகர துணைச் செயலாளா் கருணாநிதி, முன்னாள் துணைத் தலைவா் முனுசாமி, எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைத் தலைவா் முனுசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜு, ஆச்சாரஅள்ளி கூட்டுறவு சங்கத் தலைவா் நடராஜன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு காா்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குட்டி மற்றும் முக்கிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.