கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வலியுறுத்தல்

பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க பாலக்கோடு ஒன்றியப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொட்டாா்தனஅள்ளியில் ஒன்றியத் தலைவா் எம்.சாக்கன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

இக் கூட்டத்தில், தென்பெண்ணையாறு-எண்ணேகொல்புதூா், அலியாளம்-தூள்செட்டி ஏரி ஆகிய நீா்ப்பாசனத் திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். பாலக்கோடு மற்றும் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்ட துணைத் தலைவா் என். முருகேசன், நிா்வாகக்குழு உறுப்பினா் வெ.பை. மாதையன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com