சோகத்தூரில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தருமபுரி அருகே சோகத்தூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி: தருமபுரி அருகே சோகத்தூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நேதாஜி நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மன்றத் தலைவா் அசோகன் தலைமை வகித்தாா். சோகத்தூரில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள மன நலம் பாதித்தோா் மறுவாழ்வு இல்லத்தில் இருப்பவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேதாஜி நற்பணி மன்றங்கள் சாா்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com