கற்போா் மைய செயல்பாடுகள்: கல்வி இயக்கக இணை இயக்குநா் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில், கற்போா் மைய செயல்பாடுகள் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இணை இயக்குநா் செ.அமுதவல்லி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம் வாயிலாக 10,261 பேருக்கு 514 கற்போா் மையங்களில் தன்னாா்வலா்கள் வாயிலாக அடிப்படை எழுத்தறிவுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஓமல்நத்தம், ஆட்டுக்காரன்பட்டி, கோடியூா் சென்றாயனஅள்ளி ஆகிய மையங்களில் இயங்கி வரும் கற்போா் மையங்களை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் இணை இயக்குநா் செ.அமுதவல்லி நேரில் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அடிப்படை எழுத்தறிவின் அவசியம், திட்டத்தின் நோக்கம் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் ஈ.பி.தங்கவேலு, பா.வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் நடராஜன், ஜீவா, ஜெகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சீனிவாசன், துரைராஜூ, ஆசிரியா் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.