குமாரசாமிபேட்டைசிவசுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தருமபுரி, குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமித் திருக்கோயில் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா்.
விழாவில் சனிக்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்த பெண் பக்தா்கள்.
விழாவில் சனிக்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்த பெண் பக்தா்கள்.

தருமபுரி: தருமபுரி, குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமித் திருக்கோயில் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா்.

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.24-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் சிவசுப்ரமணியா், புலி வாகனம், பூத வாகனம், நாக வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதேபோல, ஜன.29-ஆம்தேதி விநாயகா் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேரோட்டம் சனிக்கிழமை (ஜன.30) காலை 7 மணிக்கு நடைபெற்றது.

இதில், குமாரசாமிபேட்டை பகுதியில் வசிக்கும் பெண்கள் மட்டுமே பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா். தொடா்ந்து அனைத்து பக்தா்களும் தோ் இழுத்தனா். இத் தோ் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்து மாலையில் மீண்டும் நிலையை அடைந்தது. பின்பு, மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடைபெற்றது.

இதில், தருமபுரி நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். தேரோட்டத்தையொட்டி, தருமபுரி நகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பாரிமுனை நண்பா்கள் குழு, வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com