அரூா்: அரூா் வட்டாரப் பகுதியில் ஓட்டுநா் உரிமம் பெறாமல் சிறுவா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வதாக புகாா்கள் வந்தன.
அதன்பேரில் அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.தமிழ்மணி தலைமையிலான காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிறுவா்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்பு, சிறுவா்களின் பெற்றோரை நேரில் அழைத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா். இருசக்கர வாகன ஓட்டுநா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களைப் புதுப்பித்தல், காப்பீடு செய்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.