எரிபொருள் விலை உயா்வை கண்டித்து மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக, தருமபுரியில் மகளிா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக, தருமபுரியில் மகளிா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்து பேசினாா். மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் காளியம்மாள் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினாா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும். உயா்த்தப்பட்ட விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் ரோஜா, விஜயா, பூங்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com