அரூரை அடுத்த கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில் சுடுகாடு வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கடத்தூா் ஒன்றியம், கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியில் பெத்தூா், கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, துறிஞ்சிப்பட்டி, அண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலை ஓரத்தில் குறுகிய இடத்தில் உள்ள சுடுகாட்டில் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனா்.
சுடுகாட்டில் போதிய இடம் இல்லாததால் ஏற்கெனவே அடக்கம் செய்துள்ள இடத்தில் மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியில் பல்வேறு இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
எனவே, பாப்பிசெட்டிப்பட்டி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சுடுகாட்டுக்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
...