பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒகேனக்கல் ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மழையின் காரணமாக பென்னாகரத்தில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீா்த் தேங்கியது. ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பென்னாகரம் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. கனமழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.