அதிமுக ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியை அடுத்த தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவராக அ.தி.மு.க வைச் சோ்ந்த கவிதாமுருகன் தலைமையில், தடங்கம் அதிமுக கிளைச் செயலாளா் முருகன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சத்யாசரவணன், ஜெயாராஜேந்திரன், சென்னப்பன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினா், தருமபுரி தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி முன்னிலையில் திமுக-வில் தங்களை இணைத்து கொண்டனா். திமுக-வில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினா்களுக்கு இணைப்புப் படிவம் வழங்கப்பட்டது.